அந்த லாரி, உத்தரபிரதேச மாநிலம் ஜலேசார் சாலையில் இரவு தங்கலுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இரவில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள், லாரியில் இருந்து 180 தோட்டாக்கள், 9 தோட்டா கொள்கலன்கள் கொண்ட 2 பைகளை திருடிச் சென்றுவிட்டனர். இந்த திருட்டு தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் பிரிவு வீரர் அவதேஷ்குமார், போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.