புதுடெல்லி,
சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சாதி மற்றும் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக மக்களவை குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இவ்வாறு பதில் அளித்தார்.