தேசிய செய்திகள்

கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்

கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவா,

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார் என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக் கானோர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி வருகின்றனர்.

முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் நோயாளிகளின் பெருக்கத்தால் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது:-

கோவா மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. மாநிலத்தில் இன்று கொரோனாவால் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது இறப்பு விகிதத்தில் அதிகம் ஆகும். கொரோனா கட்டுப்பாடுகள் மாநிலத்தில் இன்று முதல் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். பி.எம் கேர்ஸ் நிதியின் கீழ், மாநிலத்தில் 2 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும். இந்த ஆக்ஸிஜன் ஆலை 15 நாட்களில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 38 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 15,260 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு