தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் பா.ஜ.க. எம்.பி. வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளை

சத்தீஷ்காரில் பா.ஜ.க. எம்.பி. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தினத்தந்தி

சுர்குஜா,

சத்தீஷ்காரில் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருப்பவர் ராம்விசார் நேதம். இவரது வீடு சுர்குஜா மாவட்டத்தில் அம்பிகாபூர் நகரில் உள்ளது. சம்பவத்தன்று பாதுகாவலர்கள் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

எனினும், மர்ம நபர்கள் சிலர் மெல்ல உள்ளே சென்று, வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இதன்பின்பு, வீட்டில் இருந்த 1 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அம்பிகாபூர் நகர போலீசார் அகிலேஷ் கவுசிக் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பாதுகாவலர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது என அகிலேஷ் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்