தேசிய செய்திகள்

லடாக்கில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் 3.9, 4.7, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

லடாக்கின் லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.23 மணியளவில் ரிக்டர் அளவில் 4.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

44 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.800 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.608 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, லே லடாக்கில் காலை 8.31 மணியளவில் ரிக்டர் 3.9 அளவிலும், காலை 10.10 மணியளவில் ரிக்டர் 4.7 அளவிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.