தேசிய செய்திகள்

டெல்லியில் பரிதாபம் ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பலி

டெல்லியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள சிராஷ்பூர் ராணா பூங்கா பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ஹபீஸ், முகம்மது, ரியாஸ் மற்றும் இசான். இவர்கள் 4 பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் பத்லி யார்டு - ஹலாம்பி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர். அந்த நேரத்தில் எதிர் எதிர் திசையில் 2 ரெயில்கள் வந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அப்போது இசான் மட்டும் 2 தண்டவாளங்களுக்கும் இடையே உட்கார்ந்து கொண்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.மற்ற 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் முகம்மது ஹபீஸ், முகம்மது, ரியாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்