பாபி 
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில் மதுபாட்டில்கள், குட்கா கடத்திய வாலிபர் கைது

பைக்கின் ரகசிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மது பாட்டில்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பதி,

திருப்பதி மலையில் மதுபாட்டில்கள், குட்கா கடத்திய வாலிபர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் திருமலையின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் மது, மாமிசம், பீடி, சிகரெட் மற்றும் போதைப்பொருட்களை மலைப்பாதைக்கு கொண்டு செல்ல தேவஸ்தானம் கடுமையான தடை விதித்துள்ளது.

அலிபிரி சோதனை சாவடி

இத்தகைய விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்க, திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் நேற்று அலிபிரி சோதனை சாவடியில் வழக்கத்தை விட பலத்த சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் வந்த 'சரக்கு' அசாமி!சோதனை சாவடி வழியாக மலைப்பாதைக்கு செல்ல வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார், அவரது பைக்கை நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர்.

9 மது பாட்டில்கள்

அப்போது, பைக்கின் ரகசிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மது பாட்டில்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புனிதமான திருமலைக்கு மது மற்றும் போதை பொருட்களை கடத்த முயன்றதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

'பாபி' கைது

போதைப்பொருட்களுடன் பிடிபட்ட அந்த வாலிபரை போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருப்பதி சஞ்சய் காந்தி காலனியை சேர்ந்த பாபி என்பது தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருட்களை திருமலைக்கு கடத்திய குற்றத்திற்காக பாபியை போலீசார் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். திருப்பதியில் தீவிரமடைந்துள்ள இந்த சோதனை, மற்ற கடத்தல்காரர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT