தேசிய செய்திகள்

பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த 2 கொள்ளையர்கள் என்கவுண்ட்டர் மூலம் பிடிபட்டனர்

பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த 2 கொள்ளையர்களை என்கவுண்ட்டர் மூலம் போலீசார் பிடித்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 பேரை டெல்லி தனிப்பிரிவு போலீசார் வழிமறித்தனர். உடனே, அந்த 2 பேரும், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், 2 பேரும் காயத்துடன் பிடிபட்டனர். அவர்களின் பெயர்கள் அனில், அருண் என்று தெரிய வந்தது.

கடந்த மாதம், ஒரு பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்தபோது, அவர் கீழே விழுந்து காயமடைந்தார். அதில் ஈடுபட்டது, இவர்கள்தான் என்று தெரிய வந்தது. மேலும், டெல்லியில் 30 வழிப்பறி, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்