தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று பெரிய தீபாவளி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதை உறுதி செய்யுங்கள் - போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை

மராட்டியத்தில் இன்று பெரிய தீபாவளி கொண்டாட்டம் காரணமாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதை உறுதி செய்யுங்கள் என போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மும்பை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியத்தில் இன்று (புதன்கிழமை) பெரிய தீபாவளி எனப்படும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

எனவே இன்று தான் மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். மராட்டியத்தில் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும்படி மாநில டி.ஜி.பி., மண்டல கமிஷனர்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை