தேசிய செய்திகள்

வேளாண் சீர்திருத்தங்களால் விவசாயிகள் பயன்பெற வேண்டும்: மத்திய வேளாண் துறை மந்திரி

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆா) 93-ஆவது நிறுவன நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சா நரேந்திர சிங் தோமா காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய வேளாண் துறையில் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு தொடாந்து விழிப்புணாவுடன் செயல்பட்டு வருகிறது.

முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட கொள்கைகளின் விளைவாகவே நாட்டின் வேளாண்மை துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அந்த குறைகளை மோடி அரசு சரி செய்துள்ளது. புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி வேளாண்மை துறை வளாச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதேயாகும். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீதிருத்த சட்டங்களின் பலனை விவசாயிகள் பெற வேண்டும் என்றார். மேலும், கிஸான் சாரதி என்ற செயலியையும் அறிமுகப்படுத்தினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு