தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு பணி குறித்து உயர்மட்டக்குழுவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பு பணி குறித்து உயர்மட்டக்குழுவுடன் நாளை ஆலோசிக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் பயங்கரமான சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணி குறித்து உயர்மட்டக்குழுவுடன் நாளை ஆலோசிக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த இருப்பதால் மேற்கு வங்க பிரசார பயணத்தை ரத்து செய்வதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு