தேசிய செய்திகள்

எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டது: மீட்பு பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர் அருகே எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு சென்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பூரியில் இருந்து ஹரித்வார் மற்றும் கலிங்கா செல்லும் உத்கல் எக்ஸ்பிரெஸ் ரெயில் முசாபர்நகரின் கட்டாலி என்ற பகுதியில் தடம் புரண்டது. இதில் ரெயிலின் 6 பெட்டிகள் தரையில் இறங்கின.

இந்த சம்பவத்தில் பயணிகளில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT