கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின

11 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில், 11 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன.

காஷ்மீரின் ரயில் சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ரெயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் ரெயில் சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்க கூடியதாகும். கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரெயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரெயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே 65 சதவீத ரெயில்சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் 250 ரெயில்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன. இனி மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு ரெயில்களாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து ரெயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்