தேசிய செய்திகள்

துர்கா பூஜையின்போது திரிணாமுல் தலைவர்கள் சிறையில் இருப்பார்கள் - பா.ஜனதா தலைவர் கணிப்பு

துர்கா பூஜையின்போது திரிணாமுல் தலைவர்கள் சிறையில் இருப்பார்கள் என பா.ஜனதா தலைவர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

பா.ஜனதா தேசிய செயலாளர் ராகுல் சின்கா, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் சூரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

காரியம் முடித்துக் கொடுக்க உங்களிடம் லஞ்சம் வாங்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை நடுரோட்டில் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட வையுங்கள். ஆனால் அவர்களின் வீடுகளை முற்றுகையிடாதீர்கள். அப்படி செய்தால், அவர்களின் குடும்பத்தார் பாதிக்கப்படுவார்கள்.

அக்டோபர் மாதம் துர்கா பூஜையின்போது, ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு மேற்கு வங்காள மந்திரி பிராத் ஹக்கிம் கூறுகையில், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி விடும் பழைய தந்திரம் இது. சி.பி.ஐ. சம்மனுக்கு பயந்து பா.ஜனதாவில் சேர எல்லோரும் முகுல் ராய் அல்ல என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து