கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

திரிபுரா சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி மாணிக் சாஹா, துணை முதல்-மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா, திரிபுரா பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் பட்டாச்சார்ஜி, முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் தேவ், கட்சியின் மாநில பொறுப்பாளர் மகேஷ் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்சியினர் செயல்பாடு குறித்து அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. சட்டம், ஒழுங்கு விஷயத்தில் இரும்புக்கரம் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என முதல்-மந்திரியை கேட்டுக்கொண்டார். மேலும் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்