தேசிய செய்திகள்

கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செயற்கை இனப்பெருக்கம் திட்டம்- திரிபுரா வனத்துறை

சுமார் பத்தாண்டிற்கு முன்பு கிட்டத்தட்ட அழிந்து போன அழிந்து வரும் கழுகுகளை திரிபுரா இனப்பெருக்கம் செய்கிறது.

அகர்தலா,

திரிபுராவின் வனத்துறை கோவாய் மாவட்டத்தில் அழிந்து வரும் கழுகு இனத்தை இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தை கழுகு பாதுகாப்பு மற்றும் செயற்கை இனப்பெருக்கம் என்ற திட்டத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறது.

கோவாய் பிரதேச வன அதிகாரி (டிஎஃப்ஓ) நிரஜ் கே சஞ்சல் கூறுகையில், கோவாயில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவனிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறியது, செயற்கை இனப்பெருக்கத்திற்கு உதவுவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து கழுகுகள் வரவழைக்கப்படும் என்றார்.

மேலும் அவர்,மத்திய அரசின் நிதியுதவியுடன் கோவாய் மாவட்டத்தில் பத்மாபில் பகுதியில் இத்திட்டம் விரைவில் அமைக்கப்படும். அரியானாவில் இருந்து கழுகுகளை வரவழைத்து செயற்கையாக இனப்பெருக்கம் செய்து, குட்டிகள் காட்டுக்குள் விடப்படும்.

சமீபத்தில் மாவட்டத்தில் சுமார் 30-40 கழுகுகள் காணப்பட்டன. சுமார் பத்தாண்டிற்கு முன்பு, தோட்டி பறவைகள் மாநிலத்தில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன, ஆனால் வனத்துறையால் அவற்றின் வாழ்விடத்தை மேம்படுத்தியதன் காரணமாக இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு வளர்ப்புத் திட்டமே, கழுகுகளை அழிவிலிருந்து காப்பாற்றும் ஒரே செயலாகத் தோன்றுகிறது என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் டிகே சர்மா தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்