தேசிய செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: 3 பேர் சாவு

கலபுரகியில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கலபுரகி:

கலபுரகி தாலுகாவை சேர்ந்தவர் தீபக் (வயது 45). இவர் குடும்பத்துடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது தீபக் தனது மோட்டார் சைக்கிளில் மேலும் 2 சிறுவர்களை ஏற்றி கொண்டு சென்றார். அவர்கள் மகாகான் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்றபோது, அந்த சாலையில் எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தீபக், ராகுல் (17), யுவராஜ் (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து மகாகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்