தேசிய செய்திகள்

லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி

கலபுரகியில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி உயிரிழந்தார்.

தினத்தந்தி

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் உனசகி தாலுகாவை சேர்ந்தவர் மடனசாபமுல்லா (வயது 41). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அவர் தலிகோட்டை சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி, அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அவரது மனைவி உனசகி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை