தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய் புகார் அளித்த 2 பேர் கைது

கடந்த மாதம் 19-ந் தேதி, உத்தரபிரதேசம் வழியாக ஒடிசாவுக்கு 2 கேரள கன்னியாஸ்திரிகள் 2 பெண்களுடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தனர்.

தினத்தந்தி

அவர்கள் அந்த 2 பெண்களையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்வதாக பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.அதனால், உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ரெயில்வே போலீசார், கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். அது பொய் புகார் என்று தெரிய வந்ததால், அடுத்த ரெயிலில் 4 பேரையும் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், இதில் சம்பந்தப்பட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த 2 பேர் நேற்று ஜான்சி ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சரியாக விசாரிக்காமல், கன்னியாஸ்திரிகளை விட்டு விட்டதாகவும், இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் 2 பேரும் ஜான்சி ரெயில் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் அஞ்சல் அர்ஜாரியா, புருக்ஸ் அம்ரயா என்று தெரிய வந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை