Image Courtesy: ANI 
தேசிய செய்திகள்

ஐதராபாத் விமானநிலையத்தில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இருவர் கைது

ஐதராபாத் விமானநிலையத்தில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஐதராபாத் விமானநிலையத்தில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், துபாயில் இருந்து ஐதராபாத் வந்த ஆண்பயணிகள் இருவரின் உடைமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்கள் 24 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களிடமிருந்து இருந்து 1.47 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 800 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல், துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த பயணியிடம் நடத்திய சோதனையில் வெள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த நபர் ஏர் கம்ப்ரசர் உள்ளே வெள்ளியை மறைத்து வைத்து கடத்தி வந்து உள்ளார்.

அவரிடம் இருந்து 2.57 கோடி மதிப்புள்ள 4 ஆயிரத்து 895 கிராம் எடையுள்ள வெள்ளியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்