தேசிய செய்திகள்

இரு மாநில தேர்தல் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்: உ.பி - 57.44%, பஞ்சாப் - 63.44 %

இரு மாநிலத்திலும் மக்கள் விறுவிறுப்புடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதைப்போல்,பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, 57.44 சதவிகிதமும், பஞ்சாப் - 63.44 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரு மாநிலத்திலும் மக்கள் விறுவிறுப்புடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்