தேசிய செய்திகள்

பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படும் காது கேளாத, வாய் பேச முடியாத விசாரணை கைதி மரணம்

பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படும் காது கேளாத, வாய் பேச முடியாத 65 வயது விசாரணை கைதி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், உடல் நல குறைவால் கடந்த மே 29ந்தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல உறுப்புகள் பழுதடைந்த நிலையில் நேற்று உயிரிழந்து விட்டார்.

அந்நபரின் பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அவரை அடையாளம் காண முடியவில்லை. உறவினர்கள் யாரும் உடலை கேட்காத நிலையில் அதற்குரிய நடைமுறை பின்பற்றப்படும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு