தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தற்போது 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்கீழ், துப்பாக்கி ஏந்திய டெல்லி போலீஸ் குழு, பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்நிலையில், அதைவிட உயர் பாதுகாப்பான 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜெய்சங்கரின் பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (சி.ஆர்.பி.எப்.) ஒப்படைத்துள்ளது.

அதன்படி, நாட்டின் எந்த பகுதிக்கு ஜெய்சங்கர் சென்றாலும், துப்பாக்கி ஏந்திய 14 அல்லது 15 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் 24 மணி நேரமும் 'ஷிப்ட்' அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்