தேசிய செய்திகள்

15-18 வயது வரம்பில் 2 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை மந்திரி

18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பேராயுதமாக தடுப்பூசி பயன்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தொற்று பரவல் அதிகரிப்பால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி 15-18 வயதில் உள்ள இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகிறது.

15-18 வயது வரம்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு