தேசிய செய்திகள்

15-18 வயது வரம்பில் 2 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை மந்திரி

18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பேராயுதமாக தடுப்பூசி பயன்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தொற்று பரவல் அதிகரிப்பால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி 15-18 வயதில் உள்ள இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகிறது.

15-18 வயது வரம்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT