தேசிய செய்திகள்

உ.பி.: கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஆர்.பி.என். சிங் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.பி.என். சிங் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்துள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆர்.பி.என். சிங்கின் விலகல் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அவர் பா.ஜ.க.வில் சேர உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இது எனக்கான புதிய தொடக்கம். பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டியின் கீழ் தேச கட்டமைப்பில் நானும் பங்காற்றும் முனைப்பில் உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு சென்றார். அவர், மத்திய மந்திரிகள் அனுராக் தாகுர், தர்மேந்திர பிரதான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களது முன்னிலையில் பா.ஜ.க.வில் சிங், தன்னை இணைத்து கொண்டார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை