தேசிய செய்திகள்

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பதோஹி,

உத்தர பிரதேசத்தில் பதோஹி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ரவீந்திரநாத் திரிபாதி. இவர் மீது 40 வயதுடைய பெண் ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அந்த புகாரில், கடந்த 2017ம் ஆண்டு திரிபாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் தன்னை ஓட்டல் ஒன்றில் வைத்து ஒரு மாத காலம் தொடர்ச்சியாக கற்பழித்து வந்தனர் என தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து கர்ப்பமடைந்த தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவும் வைத்தனர் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரெண்டு ரவீந்திர வர்மாவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அவர் அளித்த அறிக்கையின்பேரில், எம்.எல்.ஏ. திரிபாதி மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 7 பேர் மீது எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் ஒருவர் முன் பெறப்பட்டு அதன்பின்னர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரெண்டு ராம்பதன் சிங் கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்