தேசிய செய்திகள்

உத்தரபிரதேச பட்ஜெட்டில் கோசாலைகளை பராமரிக்க ரூ.647 கோடி ஒதுக்கீடு

உத்தரபிரதேச மாநில பட்ஜெட்டில் கோசாலைகளை பராமரிக்க ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தன்னுடைய மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 2019-20-ம் ஆண்டுக்கான ரூ.4.79 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால் தாக்கல் செய்தார். இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிடவும் 12 சதவீதம் அதிகமாகும். இந்த பட்ஜெட்டில் மாநிலத்தில் கோசாலைகளை பராமரிக்க ரூ. 647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பசு பாதுகாப்பு மையங்களை பராமரிக்க ரூ.247. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் பசு பாதுகாப்பு மையங்களை சுத்தமாக பராமரிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்