தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை: அனைத்து மாநிலங்களும் 'வாட்' வரியை குறைக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலத்துக்கு பிறகு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்றவற்றால் துயர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளது.

விலை மேலும் குறைய, மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றி, உத்தரபிரதேசம் உள்பட அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை