தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் விற்பனையில் மோசடிக்கு உதவியவர் கைது

உத்தர பிரதேசத்தில் பெட்ரோல் விற்பனையில் மோசடிக்கு உதவி செய்த நபரை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (பங்க்) வாடிக்கையாளர்களை மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த மாதம் 7 பெட்ரோல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரிமோட் மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் சிப்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.3 ஆயிரத்துக்கு கிடைக்கும் இந்த சிப்களை பொருத்தினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 940 மி.லி. பெட்ரோல்தான் வாகனங்களில் ஏறும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.14 லட்சம் வரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் இந்த சிப்கள் தயாரிப்பில் தொடர்புடைய ஜவுகர் அப்பாஸ் என்பவரை சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், பெட்ரோல் நிலையங்களுக்கு எலக்ட்ரானிக் சிப்களை வினியோகித்து வந்த அஜய் சவுராசியா என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். லக்னோ அருகே உள்ள பரா பகுதியை சேர்ந்த அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்