image courtesy; ANI 
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் மரோடா கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரி கூறுகையில்,' மரோடா கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதில் பிரவின் தாஸ் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளுக்குள் 2 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநில பேரிடர் மீட்பு படை, வருவாய் துணை ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் 2 சிறுவர்களையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், 2 சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்' என அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்