தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கும் -மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது, ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி:

உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும்.

நாடு முழுவதும் தினமும் பதிவாகும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 60,000 க்கும் குறைவாக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்ந்து உள்ளது

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நிபுணர் குழுக்கள் ஏற்கனவே நாட்டில் தடுப்பூசிகளின் விநியோகத்தை எவ்வாறு வெளியிடுவது என்று திட்டமிட்டு அதற்கு தகுந்த திட்டங்கலை வகுத்து வருகின்றன.

இந்திய மக்களுக்காக கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப நாட்டில் பல கொரோனா தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்