தேசிய செய்திகள்

வாரணாசியில் ரூ.4 கோடி போலி கொரோனா தடுப்பூசி சிக்கியது - 5 பேர் கைது

வாரணாசியில் ரூ.4 கோடி மதிப்பிலான போலி தடுப்பூசி சிக்கியது. இதில் சம்பந்தப்பட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

வாரணாசி,

பிரதமர் மோடியின் தொகுதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகும். அங்கு ரோஹிட் நகரில் போலி கோவிஷீல்டு, ஜைகோவ்-டி தடுப்பூசிகளும், போலி கொரோனா பரிசோதனை கருவிகளும் தயாரிக்கப்படுவதாக போலீஸ் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் லங்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குறிப்பிட்ட இடத்தை போலீஸ் தனிப்படையினர் சுற்றி வளைத்தனர்.

அதைத் தொடர்ந்து நடத்திய அதிரடி சோதனையில் அங்கு ரூ.4 கோடி மதிப்பிலான போலி கோவிஷீல்டு, ஜைகோவ்-டி தடுப்பூசிகளும், போலி கொரோனா பரிசோதனை கருவிகளும், குப்பிகளும் இருப்பதை கண்டறிந்து அவற்றை போலீஸ் தனிப்படையினர் கைப்பற்றினர்.மேலும் இது தொடர்பாக ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா (டெல்லி), ஷாம்சர் (பாலியா), அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 5 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இவர்களில் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 3 பேரும் வாரணாசியை சேர்ந்தவர்கள். முதல் கட்ட விசாரணையில் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, ஷாம்சர். அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 4 பேரும் போலி தடுப்பூசிகளையும் பரிசோதனை கருவிகளையும் தயாரித்து லக்ஷ்யா ஜாவாவுக்கு வினியோகம் செய்து வந்ததும், அவர் பிற மாநிலங்களுக்கு தனது கும்பல் மூலம் அவற்றை வினியோகித்து வந்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம், வாரணாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்