தேசிய செய்திகள்

அந்தமானில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்...!

வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

தினத்தந்தி

போர்ட் பிளேயர்,

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ரூ.707 கோடி ரூபாய் செலவில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைத்த முனையம் அமைக்க பணிகள் தொடங்கின. 2022ம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. 

கடலையும் இயற்கையையும் பிரதிபலிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தில் இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்பம் குறையும், பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதால் மின்விளக்கின் பயன்பாடு குறைந்து மின்சாரம் சேமிப்பாகும். .

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு