தேசிய செய்திகள்

என்ஜினில் அதிர்வு: இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்

என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

டெல்லியில் இருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமான ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். என்ஜின் அதிர்வு குறித்து பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. விமானம் தரையிறக்கம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு