தேசிய செய்திகள்

குடியரசு துணை தலைவர் தேர்தல்; வெங்கய்யா நாயுடு முன்னிலை

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு முன்னிலை வகிக்கின்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியரசு துணை தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர்.

வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதீய ஜனதாவின் வெங்கய்யா 102 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி 25 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் வெங்கய்யா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு