தேசிய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த நா. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வருகிற 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட மதுபான கடைகள் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் மூடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான 13-ம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து