தேசிய செய்திகள்

கை அடி பம்பில் இருந்து கொட்டிய மதுபானம்; போலீசார் அதிர்ச்சி

போலீசார் சோதனையில் கை அடி பம்பை அடித்த போது தண்ணீருக்கு பதிலாக அதில் மதுபானம் கொட்டியது.

போபால்

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்ததாக இரண்டு கிராமங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசார் ஒரு கை அடி பம்பை ஒன்றை பார்த்தனர்.அந்த பம்பில் அடித்த போது தண்ணீருக்கு பதிலாக அதில் மதுபானம் கொட்டியது. இதை பார்த்த அறிந்த போலீஸ் குழு அதிர்ச்சியடைந்தனர். நிலத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்து அந்த் அடி பம்பு மூலம் மதுபானம் வெளியேற்றபட்டதை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.

இந்த சோதனையின் போது மொத்தம் 1200 லிட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து 400 லிட்டருக்கும் அதிகமான மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்தாக இதுவரை 2,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்