தேசிய செய்திகள்

சூடு பிடித்த ஒப்பந்த விவகாரம்: 3 ரபேல் போர் விமானங்கள் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பெங்களூரு வந்துள்ளன

ஒப்பந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா 2019 விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பெங்களூரு வந்து இறங்கி உள்ளன.

தினத்தந்தி

பெங்களூரு,

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள சூழ்நிலையில் ரபேல் விவகாரம் மத்திய அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மாநிலங்களவையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு வாரியம் (சிஏஜி) அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.

அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இது குறித்து ராகுல் காந்தி கூறும் போது அனில் அம்பானிக்காக மட்டுமே ரபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது என கூறினார்.

இந்த நிலையில் பிரான்ஸ் தயாரிப்பான ரபேல் போர் விமானங்கள் மூன்று பெங்களூருவில் தரையிறங்கி உள்ளது. வருகிற பிப்ரவரி 20ந்தேதி இந்திய விமான கண்காட்சி 2019 (Aero India show 2019) தொடங்குகிறது.

போர் விமானங்கள் யெலகங்கா விமானப்படை நிலையத்திற்கு வந்தடைந்தன என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இரு விமானங்கள் பறக்கும் பயிற்சிக்காகவும், மூன்றாவது விமானம் காட்சிக்கு வைக்கவும் பயன்படுத்தப்படும் என்று அறிக்கைகள் தெரிவித்து உள்ளன.

இந்திய விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை துணை தலைமை மார்ஷல் விவேக் சவுதாரி உள்பட ஏராளமான இந்திய விமானப்படை அதிகாரிகள் விமானத்தில் பயணிக்கிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்