தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை தனது அரசு வெற்றிகரமாக தடுத்து வருவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை தனது அரசு வெற்றிகரமாக தடுத்து வருவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசுகையில், நான் உத்தரப்பிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு பசுக்கள் மற்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த புனித விலங்கை பாதுகாப்பது எனக்கு சவாலாக இருந்தது.

நான் எனது முழு திறனையும் செலுத்தி இதனை சாத்தியமாக்கி உள்ளேன். பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை எங்களால் வெற்றிகரமாக தடுக்க முடிகிறது. அரசு சார்பில் நடத்தப்படும் கோசாலைகளில் 5 லட்சத்து 24 ஆயிரம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை