தேசிய செய்திகள்

'மணிப்பூர் விவகாரம் குறித்து 2 மணிக்கு விவாதம் நடத்துவோம்' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்

மணிப்பூர் விவகாரம் குறித்து 2 மணிக்கு விவாதம் நடத்த தயார் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விதி எண் 176ன் கீழ் பிற்பகல் 2 மணிக்கு குறுகிய கால விவாதம் நடத்த தயார் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளபோதும் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்