தேசிய செய்திகள்

‘பொருளாதாரத்தில் எழுச்சி பெறுவோம்’ - தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை

மந்தநிலை நீங்கி விட்டதாகவும், பொருளாதாரத்தில் எழுச்சி பெறுவோம் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2019-20-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை தயாரித்து வழங்கிய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நாட்டின் வணிக சுழற்சி நிகழ்வுகளை நீங்கள் உற்று நோக்கினால், அதன் ஏற்ற இறக்கங்களை கவனிக்க முடியும். தற்போதைய நிலையில் நாம் அந்த வீழ்ச்சியை முறியடித்து விட்டோம். எனவே இனிமேல் ஏற்றமே காணப்படும். அதையே நாங்கள் பட்ஜெட் போட்டிருக்கிறோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை நீங்கி விட்டது எனவும், விரைவில் எழுச்சி பெறுவோம் எனவும் கூறிய சுப்பிரமணியன், அடுத்த 2020-21-ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6 முதல 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு