தேசிய செய்திகள்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வருகிற 21ந்தேதி வெளியீடு

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கொல்கத்தாவில் வருகிற 21ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிடுகிறார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 27ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்ட தேர்தல் நடக்கிறது.

இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பானர்ஜி தனது கட்சி போட்டியிடுகிற 291 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கொல்கத்தாவில் வெளியிட்டார். அவர் இந்த முறை தனது பவானிபூர் தொகுதியில் களம் இறங்கவில்லை. அதற்கு பதிலாக அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பார்த்தா சட்டோபாத்யாய், அமித் மித்ரா ஆகிய 2 மந்திரிகள் உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 80 வயது கடந்தவர்களுக்கும் வாய்ப்பு இல்லை.

வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 முஸ்லிம்கள், 79 தாழ்த்தப்பட்ட இனத்தவர், 17 பழங்குடியினர் ஆகியோருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி 3 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயத்தினால் முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வருகிற 21ந்தேதி வெளியிடப்படுகிறது. இதுபற்றி அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா இன்று கூறும்பொழுது, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை கொல்கத்தாவில் வருகிற 21ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிடுவார் என கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு