தேசிய செய்திகள்

மேற்கு வங்காள சட்டமன்ற 2-வது கட்ட தேர்தல்: 142 தொகுதிகளில் விறு விறுப்பான வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தினத்தந்தி

  இவிஎம் இயந்திரத்தில் கோளாறு என புகார்

மேற்கு வங்காளத்தில் 2- ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பாலி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கு லேசான மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி இருவரை கைது செய்தனர். அதேபோல, நடியா மாவட்டத்தில் உள்ள சப்ரா தொகுதியில் பூத் எண் 53ல் பாஜக முகவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது

ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்: தேர்தல் ஆணையம் பதிவு

மேற்கு வங்காள சட்டமன்ற இரண்டாவது கட்ட தேர்தலில் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இன்று வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவில் வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, மேற்கு வங்கத்தின் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களித்து, தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.- பிரதமர் மோடி எக்ஸ் பதிவு

ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

மம்தா தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியும் அடங்கும். இதே தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை எதிர்கொள்கிறார். மேலும், நந்திகிராம் தொகுதியிலிருந்தும் மம்தா போட்டியிடுகிறார்.

3,22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்

மேற்கு வங்க தேர்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 3.22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்று, 1,448 வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்க உள்ளனர். போட்டியிடும் வேட்பாளர்களில் 1,228 பேர் ஆண்களும், 220 பேர் பெண்களும் உள்ளனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 4.12 லட்சம் இளைஞர்கள் இடம்பெற்றுள்ளதால், முதல் முறையாக வாக்களிப்போர் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.