தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை: பிரகாஷ் ஜவடேகர்

புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பனாஜி,

மத்திய அரசால் 'வேளாண் உற்பத்தி-வாத்தகம்-வணிகச் சட்டம்', 'விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்', அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்' ஆகிய மூன்று சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்தன. குறிப்பாக இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் தீவிர போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை. பஞ்சாபில் மட்டுமே இன்னும் போராட்டம் நடக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இந்த போராட்டங்கள் கூட இயல்பிலேயே அரசியல் கொண்டது.

கள நிலவரம் என்னவெனில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஜி.எஸ்.டி காரணமாக நமக்கு ஒரே நாடு ஒரே வரி என்ற முறை கிடைத்தது. தற்போது, ஒரு நாடு ஒரு சந்தை முறை வேளாண் சட்டங்களால் கிடைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை மூலம் ஒரே நாடு ஒரே தேர்வு கிடைத்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் கூட நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்