கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

‘குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ - சசி தரூர் யோசனை

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டார். இப்போது குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினர் பங்கேற்பு இல்லை. இந்நிலையில் நாம் ஏன் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையே ரத்து செய்யக்கூடாது? எப்போதும்போல் அணிவகுப்புகளை உற்சாகப்படுத்த மக்களை கூட்டுவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து