தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்துள்ள சீன ஊடுருவல்கள் குறித்து மவுனம் ஏன்? - மோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்துள்ள சீன ஊடுருவல்கள் குறித்து மவுனம் ஏன் என பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி உள்ளதாக கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், கல்வானில் நமது மூவர்ணக்கொடி சிறப்பாக ஒளிர்கிறது. அங்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். மோடி ஜி, உங்கள் மவுனத்தை கலையுங்கள் என குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களுக்கு சீன அரசு மறுபெயர் சூட்டியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி மத்திய அரசை சாடியிருந்தார்.

இது குறித்து அவர், வெறும் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் 1971-ம் ஆண்டு போரில் பெற்ற சிறப்பான வெற்றியை கொண்டாடினோம். நாட்டின் பாதுகாப்புக்கும், வெற்றிக்கும் சிறந்த ஞானமும், உறுதியான முடிவுகளும் தேவை. வெறும் வார்த்தைகள் வெற்றி பெற்றுத்தராது என்று குறிப்பிட்டு இருந்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்