தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 1,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 1,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பேதிலும், நாட்டில் கெரேனா பாதிப்பு தெடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகளில் மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று புதிதாக 1,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,524 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு 44 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,019 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 6,059 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்