திவாஸ்,
காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருபவர் நீலேஷ் தகாட் (வயது 26). மத்திய பிரதேசத்தின் திவாஸ் நகரில் பர்கேடா கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதி தகாட் (வயது 22). இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், கடந்த 5ந்தேதி காஷ்மீரில் குண்டு அடிபட்டு நீலேஷ் மரணமடைந்து விட்டார். தற்செயலாக நடந்த துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி உள்ளார் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்பின்னர் கடந்த வியாழ கிழமை நீலேஷின் இறுதி சடங்கு நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீலேஷிற்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் ஜோதி இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தூக்கு போட்ட நிலையில் ஜோதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.