தேசிய செய்திகள்

பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு

பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.