தேசிய செய்திகள்

கலபுரகியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு

கலபுரகியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்தார்.

தினத்தந்தி

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகா சிம்மனசோடா கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா. விவசாயி. இவரது மனைவி சுனிதா (வயது 28). இந்த நிலையில் சுனிதா, அரசு ஆஸ்பத்திரியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இருந்தார். 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வந்த அவர், திடீரென்று உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் சின்சோலி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்தடை சிகிச்சை பெற்ற நிலையல் சுனிதா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சின்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்